Saturday, May 18, 2019

LIFE AFTER 60*

*Dr Aloysius LOH:*
*LIFE AFTER 60*
*An interesting article.*

Life can begin at 60, it is all in your hands! Many people feel unhappy, health-wise and security-wise, after 60 years of age, owing to the diminishing importance given to them and their opinions. But, it need not be so, if only we understand the basic principles of life and follow them scrupulously. Here are ten mantras to age gracefully and make life after retirement pleasant.

*1. Never say I am aged' :*
There are three ages, chronological, biological, and psychological. The first is calculated based on our date of birth; the second is determined by the health conditions; the third is how old we feel we are. While we don't have control over the first, we can take care of our health with good diet, exercise and a cheerful attitude. A positive attitude and optimistic thinking can reverse the third age.

*2. Health is wealth:*
If you really love your kith and kin, taking care of your health should be your priority. Thus, you will not be a burden to them. Have an annual health check-up and take the prescribed medicines regularly. Do take health insurance coverage.

*3. Money is important:*
Money is essential for meeting the basic necessities of life, keeping good health and earning family respect and security. Don't spend beyond your means even for your children. You have lived for them all through and it is time you enjoyed a harmonious life with your spouse. If your children are grateful and they take care of you, you are blessed. But, never take it for granted.

*4. Relaxation and recreation:*
The most relaxing and recreating forces are a healthy religious attitude, good sleep, music and laughter. Have faith in God, learn to sleep well, love good music and see the funny side of life.

*5. Time is precious:*
It is almost like holding a horses' reins. When they are in your hands, you can control them. Imagine that everyday you are born again. Yesterday is a cancelled cheque. Tomorrow is a promissory note. Today is ready cash - use it profitably. Live this moment; live it fully, now, in the present time.

*6. Change is the only permanent thing:* We should accept change - it is inevitable. The only way to make sense out of change is to join in the dance. Change has brought about many pleasant things. We should be happy that our children are blessed.

*7. Enlightened selfishness:*
All of us are basically selfish. Whatever we do, we expect something in return. We should definitely be grateful to those who stood by us. But, our focus should be on the internal satisfaction and the happiness we derive by doing good for others, without expecting anything in return. Perform a random act of kindness daily.

*8. Forget and forgive:*
Don't be bothered too much about others' mistakes. We are not spiritual enough to show our other cheek when we are slapped in one. But for the sake of our own health and happiness, let us forgive and forget them. Otherwise, we will be only increasing our blood pressure.

*9. Everything has a purpose:*
Take life as it comes. Accept yourself as you are and also accept others for what they are. Everybody is unique and is right in his own way.

*10. Overcome the fear of death:*
We all know that one day we have to leave this world. Still we are afraid of death. We think that our spouse and children will be unable to withstand our loss. But the truth is no one is going to die for you; they may be depressed for some time. Time heals everything and they will go on.

_*Pass to all 60's or going to be 60 and 60+ you may know 🙏😊*_

Tuesday, May 14, 2019

நடுத்தர​ வயது ஆண்கள் மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற.......

#நடுத்தர​ வயது ஆண்கள்  மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற.......

கடைசியாக உங்கள் மனைவியுடன் எப்போது உட்கார்ந்து சந்தோஷமாக பேசினீர்கள்  என்றால்... வெகு சிலரால் மட்டுமே உடனே பதில் சொல்ல முடியும்... சிலர் சற்று  யோசித்து நினைவு கூறலாம்... பெரும்பாலோர் நினைவுகூறக்கூட முடியாத அளவுக்கு  அது ஞாபகத்தில் இருந்து மறைந்திருக்கும்...

வீட்டுக்கு வீடு  வாசப்படி என்பதுபோல.. எல்லா குடும்பங்களிலும் எதோ ஒரு பிரச்சினை  இருக்கத்தான் செய்கிறது... ஒருவேளை நீங்கள் முப்பத்துக்குட்பட்ட  தம்பதிகளாக இருப்பின்... ஒரு புணர்தல் உங்களை சமாதானப்படுத்திவிடும்...  ஒருவேளை நீங்கள் 50க்கும் மேற்பட்ட வயதினரெனில்  ஒரு நுகர்தலோ, ஒரு  பார்வையோ கூட உங்களை சமாதானப்படுத்திவிடும்...

நீங்கள் 30க்கும் 50க்கும் இடைப்பட்ட நடுத்தர வயதினரெனில்... தவிர்க்க முடியாத இடைவெளி நிரந்தரமாய் அமைந்திருக்கும்...
பேசிக்கொள்வதை குறைத்திருப்பீர்கள்.. அல்லது தவிர்த்திருப்பீர்கள்...  உங்கள் பேச்சுக்கள் 99%  பிரச்சனைகளை பற்றியதாக மட்டுமே இருக்கும்...   பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம், பண்டிகைக்கான செலவுகள், உறவுமுறை விஷேஷ  செலவுகள், வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், வீட்டிற்கு தேவையான பொருட்கள்  வாங்குதல், அதற்கான முதலீடு, கடன், கடனை கட்டுதல், கூடவே அலுவலக அழுத்தம்  என நாற்புறமும் ஜன்னல் இல்லாத அறைக்குள் அடைக்கப்பட்ட அழுத்த மனநிலையில்  எப்போதுமே இருப்பீர்கள்... இந்த அசாதாரண சூழ்நிலையில்  கணவன்-மனைவிக்குள்  அன்பான பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை...  என்றாலும்....

இந்த அழுத்த மனநிலை காலம் முடிந்து 50 களில் இருக்கும்போது யோசித்துப்பார்த்தால்..."அய்யோ..  நாம் வாழவே இல்லையே.... ஓடிக்கொண்டே இருந்திருக்கிறோமே.... " என்ற  ஏமாற்றமும், கழிவிறக்கமும் வரும்... அப்போது உங்களை ஆதிக்கம் செலுத்த ஒரு  மருமகள் வந்திருப்பார்... உங்கள் சுதந்திரம் பறிபோயிருக்கும்... உங்கள்  உடம்பு ஒத்துழைக்காது.... உங்கள் மனம் ஒத்துழைத்தாலும்... சமூகம் அதை  அங்கீகரிக்காது..."கிழவனும் கெழவியும் இப்போதான் கொஞ்சிக்கிடுதுங்க.." என்று ஏளனம் செய்யும்...

எதை சாதிக்க ஓடினோம்?? கேள்விகள் தூங்க விடாது... யாருக்காக நீங்கள்  உங்கள் இளமையை, வாழ்வை தொலைத்தீர்களோ.. அவர்கள் உங்களை புறக்கணித்து,  நீங்கள் யாருக்காக ஓடினீர்களோ.. அதேபோல அவர்களும்  யாருக்காகவோ  ஓடிக்கொண்டிருப்பார்கள்....

உங்கள் விரல்கோர்த்து  கனவுகளுடன் வாழ்வை தொடங்கிய பெண்... காலம்  சப்பிப்போட்ட கரும்பு சக்கையாய் பொலிவிழந்து ,  கண்கள் குழிவிழுந்து  எச்சமாய் நடமாடிக்கொண்டிருப்பர்...

இப்படித்தான் வாழ வேண்டுமா?? இல்லை.... குறைந்தபட்ச மாற்றங்களையாவது முயற்சிக்கலாம்...

* சமையலறை என்பது 7 அடுக்கு பாதுகாப்பு கொண்ட எதிரியின் கோட்டை அல்ல....   நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கே செல்லுங்கள்.. கழுவாமல் விட்டிருக்கும்  ஓரிரு பாத்திரங்களை கழுவுங்கள்.. கூட்டோ பொறியாலோ செய்யும் போது  குறைந்தபட்சம் கரண்டியை வாங்கி கிளறுங்கள்...

* விடுமுறை நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ அவர்களுக்கு சமையலறையில் இருந்து ஒய்வு கொடுங்கள்.. அல்லது கூட மாட ஒத்தாசை செய்யுங்கள்..

*வாரம் ஒருமுறை வேண்டாம்... மாதம் ஒருமுறையாவது "இன்னிக்கு சமைக்க  வேண்டாம்.. நாம வெளில போகலாம்... எங்க போகலாம்ன்னு நீ சொல்லு" என்று  விடுமுறையுடன் , முடிவெடுக்கும் வாய்ப்பையும் கொடுங்கள்...

* குழந்தை பிறந்தபிறகு இயல்பாகவே பெண்களின் எடை கூடும்....
அந்த எடைகூடலை கேலி செய்யாமல்.. அந்த அழகை ரசிக்க பழகுங்கள்... அவர்களின் கர்ப்பகால சங்கடங்களை நினைவு கூருங்கள்...

* அவ்வப்போது  அவர்களின் தாய் வீட்டு விசேஷங்களை, நலன்களை விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்..

* எல்லா செலவுகளுக்கும் உங்களை எதிர்பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை  தவிர்த்து  முன்கூட்டியே அவர்களிடம் செலவுக்கான பணத்தை கொடுத்து  விடுங்கள்.... "கொடுத்துட்டேன்.. என் வேலை முடிந்தது" என்ற எண்ணம்  தவிர்த்து , இடை இடையே கையிருப்பு இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்..

* உங்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் கேரியர்  மீது அவர்கள் செய்துகொண்ட சுயசமாதானத்தை போற்றி நினைவுகூருங்கள்..

* உங்கள் வேலை முடிந்த உடன் தூங்க செல்லாமல், உங்கள் மனைவி சமையலறை  வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை அவருக்காக காத்திருந்து ஓரிரு  வார்த்தைகளாவது பேசியபின் தூங்கச்செல்லுங்கள்...

* உங்க ஒயிப்  ஒர்க் பண்றாங்களா.. என்று யாராவது கேட்டால்..."இல்லை... சும்மாதான்  இருக்கிறார்" என்று சொல்லாதீர்கள்... மாறாக...." குடும்ப நிர்வாகத்தை  அவர்தான் கவனிக்கிறார்" என்று சொல்லுங்கள்... இந்த அங்கீகாரமே பல  போராட்டங்களுக்கான காரணம்

* முடிந்தவரை "உனக்காக வாங்கினேன்...."  என்று எதையாவது பரிசளியுங்கள்.... அவர்கள்  கலர் சரியில்லை, நல்லாவே இல்லை  என்றாலும்  கண்டுகொள்ளாதீர்கள்.... ஏனென்றால்... அவர்களே வாங்கி வந்தாலும்  கூட  வீட்டிற்கு வந்த உடன் பிடிக்காமல் போவது பெண்கள் இயல்பு.... உங்கள்  அன்பும் கலந்திருப்பதால்... பார்க்கப்பார்க்க அது அவர்களுக்கு  பிடிக்கும்...

*முக்கியமாக, எக்காரணம் கொண்டும் மனைவியிடமோ,  மனைவிக்கு முன்னாலோ வேறொரு பெண்ணை புகழ்ந்து பேசாதீர்கள்.. அது உங்கள்  உடன்பிறந்த சகோதரியாவாகவே இருந்தாலும்... ஒருவேளை உங்கள் மகளை புகழவேண்டி  வந்தால் "உன்னைப்போலவே.." என்று எக்ஸ்ட்ரா பிட்டிங் அவசியம்...

*ஏதேனும் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால்..."அன்னிக்கு அவங்க வீட்டு  கல்யாணத்துக்கு போனப்போ  நீ இந்த புடவை தான கட்டிட்டு வந்த..... வேற புடவை  கட்டிட்டு  வா.... அந்த மஞ்சள் புடவை உனக்கு நல்லா இருக்கும்.." என்பது  போன்ற ஆலோசனைகள் அவசியம்.... இது நீங்கள் உங்கள் மனைவியை ரசிக்கிறீர்கள்  என்பதை அவர்களுக்கு உணர்த்தும்...

* "ஏன் ஒரு மாதிரி இருக்க....  தலை எல்லாம் கலைஞ்சிருக்கு,, ரொம்ப டயர்டா இருக்க...  உடம்பு சரி  இல்லையா.." என்பது போன்று விசாரியுங்கள்... இது உங்கள் மனைவி மீதான  அக்கறையை அவருக்கு உணர்த்தும்...

* இதை எல்லாம் தாண்டியதுதான் உடல் சார்ந்த தேவைகள்... முடிந்தவரை அதை ஈடு செய்ய முயற்சியுங்கள்...

அப்புறமென்ன.... வாழ்க்கை வசப்படும்...
திரும்பி பார்க்கையில் வாழ்ந்த  திருப்தி கிடைக்கும்...
படித்ததில் பிடித்தது.

Monday, May 13, 2019

REFERENCE BOOK LIST FOR UGC NET COMPUTER SCIENCE:

REFERENCE BOOK LIST FOR UGC NET COMPUTER SCIENCE:

1. Discrete Structures -Seymour Lipschutz  
2.  Theory of Computation
1. Introduction to Automata Theory, Languages and Computation – John E. Hopcroft and Ullman

2. Algorithms and Theory of Computation Hand Book – Horwitz Sahaney

3. C and C++
1. Programming in C - Byron Gottfried  
2. OOPS using C++  - E. Balagurusamy 

4. Computer Arithmetic
1. Digital Logic and Computer Design – M. Morris Mano 

5. Data and File Structure
1. Data structure – Seymour Lipschutz  
2. Data structure using C – Tenenbaum, Langsam and Augenstein
6. Relational Design and Database
1. Fundamentals of Database Systems - Ramez Elmasri, Navathe  
2. Database Management – G.V. Post
7. Computer Networks
1. Computer Networks - Andrew S. Tanenbaum
2. Data and Computer Communications -William Stallings
8. System Software & Compilers
1. Microprocessor Architecture, Programming and Applications with the 8085 –Ramesh S. Gaonkar 
2. Compilers: Principles, Techniques and Tools – Aho, Lam, Sethi and Ullman  

9. Operating Systems with Unix
1. Operating System Concepts – Galvin and Silberschatz 
2. Operating Systems Internals and Design Principles -William Stallings
3. Unix-Concepts and Applications -M. J. Back, S. Das

10. Software Engineering
1. Software Engineering A Practitioner’s Approach – Roger S. Pressman
2. Software Engineering concepts- Richard fairley 

11. Current Trends and Technologies
1. Introduction to Parallel Computing – M. J. Quinn

12. Computer Graphics
1. Introduction to Computer Graphics - Hearn and Baker, Rogers
13. Artificial Intelligence
1. Artificial Intelligence - Elaine Rich and Kevin Knight  
14. Mobile Computing
1. Mobile Communications - Joechen Schiller
COMPUTER ORGANIZATION AND ARCHITECTURE:

Computer Architecture and Organisation J.P. Hayes
Computer organization and architecture: Hamacher, kye haung
PROGRAMMING & DATA STRUCTURES AND ALGORITHMS:

Data structure : A. S. Tanenbaum, J.D. Ullman
Data structures and algorithms Horowitz, Sahani
Algorithm analysis and design: T.h.cormen, Anne levitin
THEORY OF COMPUTATION:

Theory of computation: Peter linz, J.d. ullman, Papadimitriau
K.L.P Mishra & N. Chandrasekharan Theory of Computer Science PHI
COMPILER DESIGN:

Compilers: Principles, Techniques, and Tools (2nd Edition) Alfred V. Aho, Monica S. Lam, Ravi Sethi, Jeffrey D. Ullman
OPERATING SYSTEM:

Operating system: w. stallings, Galvin, a. s. Tanenbaum
Operating Systems Silberschatz
The design of Unix operating system Maurice J. Bach
DATABASES:

Databases Management System H.H. KORTH, NAVATHE
DBMS C.J. Date
COMPUTER NETWORKS:

A. S. TANENBAUM, W.STALLINGS
Forouzen
INFORMATION SYSTEMS AND SOFTWARE ENGINEERING:

Software Engineering Pressman
GRAPH THEORY:

NARSHIMA DEO

Sunday, May 12, 2019

மதிப்பீடுகள்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து.. ஒவ்வொருவரையும்..
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும்.. அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன்.. டீச்சர் சொல்கிறார்..

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே.. அவர்களிடம் நீங்கள்
காணும்.. உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும்.. யோசித்து.. தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக் கடைசி  டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து..

அதில் மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு..

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்...

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்...

10 நிமிடங்கள்  வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது..

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?

என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?”

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் ..............................
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்..

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக.. ஒவ்வொரு மாணவனுக்கும்..சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது...

பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான்.

பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து..
மரணம் அடைகிறான்...

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது...

இறுதிச் சடங்கில்
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்...

மிடுக்கான ராணுவ உடையில்
நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு..

சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்...

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர்...

டீச்சர் கடைசியாகச் செல்கிறார்...

பின்னர்.. பக்கத்திலேயே நிற்கிறார்...

உடலைத் தாங்கி வந்த ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்...

ஒரு வீரர் கேட்கிறார் ”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று.

டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்..

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர்
எனக்கு உங்களைத் தெரியும்...

சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்..

சடங்குகள் முடிந்த பின்னர்..

சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்..

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்..

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் ..

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்...

இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது..

பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக..
பல முறை மடிக்கப்பட்டு.. மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு.. பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்...

ஆமாம்  பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான்...!

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் ..

“ரொம்ப நன்றி டீச்சர்  உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்...

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்...

"அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்..
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..

ஆம்..என் இனிய நண்பர்களே..!
உறவுகளே..!
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது...

எங்கே துவங்கும்  எப்படி இருக்கும் எப்போது
எப்படி முடியும்.. ?

யாருக்கும் தெரியாது...

இருக்கின்ற காலத்தில்  நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்...

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்...

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்..

நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக..
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்...

ஆனால்.. ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை.. குணங்களை..
அநேகமாக  நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்...

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள்..அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது பாராட்டுவது இல்லை..!

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை ..!

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே..
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது..

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது..!

நீங்களோ நானோ இந்த முகநூலில் கூட லைக்கோ...
கமெண்ட்ஷோ சின்ன பிள்ளை தனமா ஆசை படுவது இல்லையா....!

யாருமே அதற்கு விதிவிலக்கல்ல..

வெளிப்படையான பாராட்டுதல்
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்...

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்..

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்...

மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும் உறவுகளே..!  

Friday, May 10, 2019

Learn multiple things

#ஒரு_இனிமையான_கதை...

துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

நெசவாளி சொன்னான்:
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம். வெற்றி நமதே.

Monday, May 6, 2019

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் செயல்களில்  உள்ளது. .
_________________________________________
அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. 
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக் கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.  அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். 

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. 

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது. 

பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. 

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்ன வர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது. 

முடிவாக, அதோ.... கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்..... வந்தே விட்டோம்...... இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. 

ஆனால், இதென்ன.... ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக் கிறதே.  கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது. 

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். 

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.  அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள் வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக் கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."💐