உங்களை விசாரிக்கும் போதும்
'எனக்கு நிறைய நேரம்
இருக்கிறது என்றோ
எனக்கு வேலை வெட்டி இல்லை' என்றோ
உங்களுக்கும் தோன்றக்கூடும்
என் சக மனிதனுக்கு
சிறிது நேரத்தை செலவிடுவதும்
என் அன்பானவர்களுக்கு கொஞ்சம்
அக்கறையை காட்டுவதைவிடவும்
எனக்கு என்ன பெரிய வேலை இருந்துவிட போகிறது என் வாழ்வில்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment