படித்துக் கொண்டிருக்கும்
புத்தகப் பக்கங்களில்
எறும்பு ஒன்று உலவிக் கொண்டிருக்கிறது
ஒருவேளை
இனிப்பான வார்த்தைகளை தேடுகிறது போலும்
அந்தப் பக்கம் படித்து முடித்த பின்
எறும்பு இறங்கி செல்லும் என காத்திருக்கிறேன்
நீண்ட தேடுதலுக்கு பின் இறங்கி செல்கிறது எறும்பு
நான் அடுத்த பக்கத்தில் தேடுதலை துவங்குகிறேன்.
-பூமி.சாமி.
No comments:
Post a Comment