Tuesday, October 21, 2025

படித்துக் கொண்டிருக்கும் 
புத்தகப் பக்கங்களில் 
எறும்பு ஒன்று உலவிக் கொண்டிருக்கிறது

ஒருவேளை
இனிப்பான வார்த்தைகளை தேடுகிறது போலும் 

அந்தப் பக்கம் படித்து முடித்த பின்
எறும்பு இறங்கி செல்லும் என காத்திருக்கிறேன்

 நீண்ட தேடுதலுக்கு பின் இறங்கி செல்கிறது எறும்பு 

 நான் அடுத்த பக்கத்தில் தேடுதலை துவங்குகிறேன்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment