தோல்வியடைந்தவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியது
வீழ்ந்தவர்களை கைக் கொடுத்து தூக்கியது
துயரத்தில் கண்ணீர் துடைத்தது
பயத்தில் கை கோர்த்து தைரியம் தந்தது
ஒருநாள் அந்த கரம்
துயரத்தில் மூழ்கி கிடந்தது
எதாவது ஒரு கரம் வரும் நம்பிக்கை
கொண்டது
ஆனால்
உலகின் உண்மையை உணர்ந்தது
தன்னை கை ஊன்றி கொஞ்ச கொஞ்சமாய்
மீண்டு வந்தது.
பூமி.சாமி.
No comments:
Post a Comment