Friday, May 30, 2025

சில வார்த்தைகள் உதட்டோடு நின்றுவிடுகிறது 

சில வார்த்தைகள் மனதோடு புதைந்து போகிறது 

சில வார்த்தைகளை பேசியபின்
வாபஸ் வாங்குகிறேன் 

சில வார்த்தைகளை பேசியதற்கு
மன்னிப்பு கோருகிறேன் 

இவைகளை தாண்டி சிற்சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேன்
 
அவைகளும் தேவையா என தற்போது யோசிக்க தொடங்கி விட்டேன் நான்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment