Monday, September 2, 2024

உதவி என்றவுடன்
உன் ஞாபகம் தான் வந்தது 
கேட்டேன், செய்தாய்
காலப்போக்கில்
உன் உதவியை மறந்தேன்
உன்னையும் மறந்தேன்

இப்பொழுதும்
ஒரு உதவி தேவைப்படுகிறது
மீண்டும் உன் ஞாபகம் தான் வருகிறது
நன்றி கெட்ட மனதை
திட்டிக்கொண்டே
கொஞ்சம் கூட கூச்சம்
இல்லாமல்
கேட்டு விடுகிறேன் 
நீ செய்வாய் 
என்ற நம்பிக்கையில்.

பூமி.சாமி.

No comments:

Post a Comment