#நீ . . .நீயாக இரு !தங்கம் விலை அதிகம்தான் . . .தகரம் மலிவு தான் . . .ஆனால் தகரத்தைக் கொண்டுசெய்யவேண்டியதைதங்கம் கொண்டு செய்யமுடியாது . . .அதனால் தகரம் மட்டமில்லை . . .தங்கமும் உயர்ந்ததில்லை . . .எனவே நீ . . .நீயாக இரு !கங்கை நீர் புனிதம் தான் . . .அதனால் கிணற்று நீர் வீண் என்றுஅர்த்தமில்லை . . .தாகத்தில் தவிப்பவருக்குகங்கையாயிருந்தால் என்ன ?கிணறாகயிருந்தால் என்ன ?நீ . . .நீயாக இரு !காகம் மயில் போல் அழகில்லை தான் . . .ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !நீ . . .நீயாக இரு !நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !நீ . . .நீயாக இரு !பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !நீ . . .நீயாக இரு !ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !நீ . . .நீயாக இரு !நேற்று போல் இன்றில்லை . . .இன்று போல் நாளையில்லை . . .அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !எனவே நீ . . .நீயாக இரு !அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !அதில் பாபம் ஏதுமில்லை !அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !உன்னை உரசிப் பார் . . .உன்னை சரி செய்து கொண்டே வா . . .நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன் வழி நடக்கும் ! ! !நீ . . .நீயாக இரு !நீ . . .நீயாகவே இரு !...
படித்ததில் பிடித்தது.
Saturday, December 29, 2018
நீ . . .நீயாக இரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment