Wednesday, November 3, 2021

இதுவும் அதே வாய்தான்...

பிறரிடம் பேசும் சொற்களை நாம்
காலத்தை மற்றும் தேவையை பொறுத்து மாற்றிக் கொள்கிறோம், ஆனால் கேட்கும் மனிதர்கள் ஒன்று என்பதுதான் நம்மை கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது.
-சாமி.

Tuesday, November 2, 2021

மழையும் நானும்

கல்லூரியில் வேலை முடிந்து 
வெளியில் வருகிறேன் நான்,

மழை மல்லிகையாய் கொட்டுகிறது,
மழை உடுப்பை மறந்ததை மனம் கொண்டாடுகிறது,

அறிவு ஆஸ்பித்திரியை நினைத்து பயம் கொள்கிறது,

மழையில் நனைந்தபடி பைக்கை செலுத்துகிறேன் நான்,

மழையில் ஒதுங்கி நிற்பவர் எல்லாம்
பாவப்பட்டவராய் தெரிகிறார்கள் எனக்கு,

என்றும் வேகமாய் செல்லும் வண்டி
 மெது மெதுவாய் செல்கிறது இன்று,

மிரட்டுகிறது மின்னல், குளிரில் நடுங்கிறது உடல், அதிலும் நடனம் ஆடுகிறது மனம்,

வெறும் சாலையில் நானும் மழையும் மட்டுமே செல்கிறோம்,

வீடு வருகிறது, இன்றுதான் வீடு இவ்வளவு அருகில் ஏன் இருக்கிறது என்ற நினைப்பும் வருகிறது,

மனைவி திட்டலுக்கு பின் தந்த தேனீர் இதமாய் இருக்கிறது,

தலை துவட்டியபின் மண்டையைவிட்டு இறங்கிய மழை இன்னும் மனதைவிட்டு இறங்க மறுக்கிறது.


-சாமி.


Monday, November 1, 2021

புகழுரைகள்

விமர்சனங்களை கூட ஒரளவுக்கு
எதிர்க்கொள்ள தெரிந்த நமக்கு,
புகழுரைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.

-சாமி.


Monday, October 25, 2021

உண்மையான வலி நிறைந்த வரிகள்

பிரபஞ்சனின் துணைவியார் பிரமீளா
சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து 
போனார். அவரது முதாலண்டு நினைவின்

போது பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரயை படித்து கண்கலங்கிப்போனேன்.
அது நம் அனைவருக்குமான அறிவுரை என்றே
சொல்வேன்.

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது.

எனக்கு முன் என் துணைவர் இறந்தது எனக்கு
மகிழ்ச்சியைத் தருகிறது. மரணம் எனக்கு
நேர்ந்து, அவர் பூமியில் தங்க நேர்ந்திருந்தால்,
மிகுந்த அவமானங்களைச் சந்தித்து இருப்பார்.
அவமானத்தின், புறக்கணிப்பின் நிழல் கூடப் 
படக்கூடாத ஆத்மா அவர். இவை போன்ற
சிறுமைகள் எல்லாம் எனக்கே உரியவை.

நட்சத்திரக் கணக்குப்படி, அவர் இறந்து இந்த 16
மார்ச்சோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
அவரது இல்லாமை இப்போதுதான் என்னைத்
தாக்கத் தொடங்கி இருக்கிறது. இளமையில் துணை 
இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான்
துணையின் அவசியம் கூடுதலாக உணர
முடிகிறது.

நிறைந்த கனவுகளும், லட்சியங்களும் கண்களில்
மிதக்க, ஆனந்தமாகப் பறந்து திரிய வேண்டிய,
அறிவும் ஞானமும் பொலிந்த, மகத்தான மானுட
உணர்வுகள் கொண்ட பெண்மணிகளை மனைவியாக் 
கொண்டு, அவர்களைக் கீழிறக்கி, ஒளி இழக்கச் 
செய்த , செய்து கொண்டிருக்கும் கோடி கோடி 
ஆண்களின் வரிசையில் நானும் சேர்ந்து இருக்கிறேன்.
என்கிற குற்றவுணர்வு மட்டும் எப்போதும் என்னுடன்
இருந்து தீரும் அதிலிருந்து நான் தப்ப முடியாது.

-எஸ்.ராமகிருஷ்ணன்
சொற்களின் புதிர்பாதை

Monday, October 18, 2021

மனப்பரண்

தினம் தினம் கீழ்இறக்கி, மகிழ்ந்து,
மீண்டும் மனப்பரணில் போட்டு வைக்கிறேன் குழந்தை நினைவுகளை.
-சாமி.

Saturday, October 16, 2021

மதியாதார் வாசல் மிதியாதே

கேட்காமல் யாருக்கும் அறிவுரைகள் இல்லை,

மதிப்பில்லாத இடத்தில் காட்டும் அக்கறையும் இல்லை,

ஆர்வகோளரால் அழைக்கும் அலைபேசி 
அழைப்புகளும் இல்லை,

வலியப் போய் செய்யும் 'whatsapp chat '--ம் இல்லை,

இப்பொழுது,

எதிர்பார்ப்பும் இல்லை
ஏமாற்றமும் இல்லை
வெந்த புண்ணில் பாயும் வேலும் இல்லை.

-சாமி.

Friday, October 15, 2021

முதுமை

'Money' க்காக மணிப்பார்க்காமல்
ஓடும் உலகில், 
அலைபேசி மணி அடிக்குமா பேசுவதற்கு என ஏங்கி நகர்கிறது முதுமை.

-சாமி.