Tuesday, September 21, 2021

இங்கு எல்லோரும்
தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்,
தவணை முறையில்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா.

Monday, September 20, 2021

கொரானா காலம்

இப்பொழுது
தாடிகள் தப்பிக்கிறது
முக கவசத்தின் கருணையால்.

-சாமி.

Saturday, September 18, 2021

நன்றி

நன்றி செய்தவருக்கு வாலாட்டுகிறது ஐந்தறிவு,
நன்றி செய்தவரிடமே வாலாட்டுகிறது ஆறறிவு.

-சாமி.

Friday, September 17, 2021

அக்கறை-ஏமாற்றம்

அக்கரையில் அக்கறை
இக்கரைக்கு ஏமாற்றம்.

-சாமி.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும் 
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

தந்தை பெரியார்.

Thursday, September 16, 2021

முன்னேற்றம்

முன்பெல்லாம் புறக்கணிப்பை முகசுழிப்பு மற்றும் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்ட நாம் இப்பொழுது         " Chat Texting" லேயே தெரிந்து கொள்வது தான் முன்னேற்றம்.

கடவுள்-நாம்

கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும்
ஆனால் நாம் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை,

கடவுள் நம்மிடம் கருணை காட்ட வேண்டும் ஆனால்
 நாம் யாரிடமும் கருணை காட்ட தயாராக இல்லை,

நாம் வேண்டும் அனைத்தையும் கடவுள் தரவேண்டும் ஆனால்
 நாம் யாருக்கும் எதையும் தர தயாராக இல்லை,

உண்மையில்,
கல்லாக இருக்கும் கடவுள் உயிரோடு இருக்கிறார்,
உயிரோடு இருக்கும் நாம் கல்லாக இருக்கிறோம்.

-சாமி.